கோவை, அக்டோபர்.28: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு, கொடுத்த கடன் வராததால், மகனுடன் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குமார். விசைத்தறி உரிமையாளரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த நகை கடை உரிமையாளரான மோகன்குமார் என்பவருக்கு தொழில் நிமித்தமாக 10 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். கடன் கொடுத்து மூன்று ஆண்டுகள் ஆகியும் பணத்தை திருப்பி தராமல் மோகன்குமார் தாமதித்து வந்துள்ளார்.
பின்னர், இது தொடர்பாக கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் குமார் புகார் அளித்துள்ளார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் குமார் மனமுடைந்துள்ளார். இதையடுத்து, கோவை எஸ்.பி. ஆபிஸில், தனது 7 வயது மகனுடன் குமார் இன்று காலை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதுதொடர்பாக, புகார் அளிக்க வந்த அவரை காவலர்கள், குடிகாரர் என புறக்கணித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் மறைத்து வைத்திருந்த மண்ணென்ணையை தன் மீதும், தன் 7 வயது மகனின் உடல் மீதும் ஊற்றியதுடன், தீப்பற்ற வைக்க முற்பட்டார்.
அப்போது அங்கிருந்த தனியார் தொலைக்காட்சியின் நிருபர் சொர்ணகுமார் என்பவர், அவரிடமிருந்து தீப்பெட்டியை பிடுங்கி அவரைக் காப்பாற்றினார்.
இதைத்தொடர்ந்து, அங்கு வந்த காவல் துறையினர் அவ்விருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கோவை, கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குமார். விசைத்தறி உரிமையாளரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த நகை கடை உரிமையாளரான மோகன்குமார் என்பவருக்கு தொழில் நிமித்தமாக 10 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். கடன் கொடுத்து மூன்று ஆண்டுகள் ஆகியும் பணத்தை திருப்பி தராமல் மோகன்குமார் தாமதித்து வந்துள்ளார்.
பின்னர், இது தொடர்பாக கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் குமார் புகார் அளித்துள்ளார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் குமார் மனமுடைந்துள்ளார். இதையடுத்து, கோவை எஸ்.பி. ஆபிஸில், தனது 7 வயது மகனுடன் குமார் இன்று காலை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதுதொடர்பாக, புகார் அளிக்க வந்த அவரை காவலர்கள், குடிகாரர் என புறக்கணித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் மறைத்து வைத்திருந்த மண்ணென்ணையை தன் மீதும், தன் 7 வயது மகனின் உடல் மீதும் ஊற்றியதுடன், தீப்பற்ற வைக்க முற்பட்டார்.
அப்போது அங்கிருந்த தனியார் தொலைக்காட்சியின் நிருபர் சொர்ணகுமார் என்பவர், அவரிடமிருந்து தீப்பெட்டியை பிடுங்கி அவரைக் காப்பாற்றினார்.
இதைத்தொடர்ந்து, அங்கு வந்த காவல் துறையினர் அவ்விருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
