கோவையில் மகனுடன் தீக்குளிக்க முயன்ற தந்தை: பத்திரிக்கையாளர்கள் காப்பாற்றியதால் உயிர் தப்பினர்

கோவை, அக்டோபர்.28: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு, கொடுத்த கடன் வராததால், மகனுடன் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குமார். விசைத்தறி உரிமையாளரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த நகை கடை உரிமையாளரான மோகன்குமார் என்பவருக்கு தொழில் நிமித்தமாக 10 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். கடன் கொடுத்து மூன்று ஆண்டுகள் ஆகியும் பணத்தை திருப்பி தராமல் மோகன்குமார் தாமதித்து வந்துள்ளார்.

பின்னர், இது தொடர்பாக கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் குமார் புகார் அளித்துள்ளார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் குமார் மனமுடைந்துள்ளார். இதையடுத்து, கோவை எஸ்.பி. ஆபிஸில், தனது 7 வயது மகனுடன் குமார் இன்று காலை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.



இதுதொடர்பாக, புகார் அளிக்க வந்த அவரை காவலர்கள், குடிகாரர் என புறக்கணித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் மறைத்து வைத்திருந்த மண்ணென்ணையை தன் மீதும், தன் 7 வயது மகனின் உடல் மீதும் ஊற்றியதுடன், தீப்பற்ற வைக்க முற்பட்டார்.

அப்போது அங்கிருந்த தனியார் தொலைக்காட்சியின் நிருபர் சொர்ணகுமார் என்பவர், அவரிடமிருந்து தீப்பெட்டியை பிடுங்கி அவரைக் காப்பாற்றினார்.

இதைத்தொடர்ந்து, அங்கு வந்த காவல் துறையினர் அவ்விருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.



Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...