20 சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வால்பாறையை அடுத்துள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தீபாவளி போனஸ் வருடந்தோறும் தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பாக வழங்குவது வழக்கம்.

இந்நிலையில், நடப்பாண்டிற்கான போனஸ் கடந்த 7-ம் தேதி எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் 8.33 சதவிகிதம் போனஸ் தொகையாக தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் எஸ்டேட் நிர்வாகம் செலுத்தியுள்ளது.
இதையறிந்த தொழிலாளர்கள் 20 சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தோட்ட நிர்வாகத்தின் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து எஸ்டேட் நிர்வாக அலுவலகத்தின் முன்பு தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, விடுதலை கட்சியின் தொழிற்சங்க தலைவர் வீரமணி, கேசவமுருகன், ஐஎன்டியூசி பிரபாகரன், சிஐடியூ பரமன், ஹெச்.எம்.எஸ் மாணிக்கம், சோலையார் எஸ்டேட் தொழிலாளர் பிரதிநிதி முருகன் ஆகியோர் 17-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், 20 சதவிகித போனஸ் கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

வால்பாறையை அடுத்துள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தீபாவளி போனஸ் வருடந்தோறும் தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பாக வழங்குவது வழக்கம்.

இந்நிலையில், நடப்பாண்டிற்கான போனஸ் கடந்த 7-ம் தேதி எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் 8.33 சதவிகிதம் போனஸ் தொகையாக தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் எஸ்டேட் நிர்வாகம் செலுத்தியுள்ளது.
இதையறிந்த தொழிலாளர்கள் 20 சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தோட்ட நிர்வாகத்தின் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து எஸ்டேட் நிர்வாக அலுவலகத்தின் முன்பு தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, விடுதலை கட்சியின் தொழிற்சங்க தலைவர் வீரமணி, கேசவமுருகன், ஐஎன்டியூசி பிரபாகரன், சிஐடியூ பரமன், ஹெச்.எம்.எஸ் மாணிக்கம், சோலையார் எஸ்டேட் தொழிலாளர் பிரதிநிதி முருகன் ஆகியோர் 17-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், 20 சதவிகித போனஸ் கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
