வால்பாறை தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தைக் கண்டித்து தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

20 சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வால்பாறையை அடுத்துள்ள தனியார்  தேயிலைத் தோட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தீபாவளி போனஸ் வருடந்தோறும் தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பாக வழங்குவது வழக்கம்.



இந்நிலையில், நடப்பாண்டிற்கான போனஸ் கடந்த 7-ம் தேதி எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் 8.33 சதவிகிதம் போனஸ் தொகையாக தொழிலாளர்களின் வங்கிக்  கணக்கில் எஸ்டேட் நிர்வாகம் செலுத்தியுள்ளது.

இதையறிந்த தொழிலாளர்கள் 20 சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தோட்ட நிர்வாகத்தின் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து எஸ்டேட் நிர்வாக அலுவலகத்தின் முன்பு தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, விடுதலை கட்சியின் தொழிற்சங்க தலைவர் வீரமணி, கேசவமுருகன், ஐஎன்டியூசி பிரபாகரன், சிஐடியூ பரமன், ஹெச்.எம்.எஸ் மாணிக்கம், சோலையார் எஸ்டேட் தொழிலாளர் பிரதிநிதி முருகன் ஆகியோர் 17-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், 20 சதவிகித போனஸ் கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.



Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...