கோவை மாநகராட்சி சார்பில் இன்று "ஏடிஸ் கொசு ஒழிப்பு தினம்" கடைபிடிப்பு

தமிழக அரசின் உத்தரவின்படி, டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் மற்றும் துணை ஆணையர் ப.காந்திமதி ஆகியோரின் அறிவுறுத்தலின்படி கோவை மாநகராட்சி சார்பாக பல்வேறு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு வியாழக் கிழமைகளிலும் “ஏடிஸ் கொசு ஒழிப்பு தினம்” கடைபிடித்து, அனைத்து அரசு மற்றும் தனியார் வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் பூங்காக்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி இன்று (12.10.2017) கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசு அலுவலக வளாகங்கள், வட்டாட்சியர் அலுவலக (தெற்கு) வளாகங்கள், கிராம நிர்வாக அலுவலக வளாகங்கள் உட்பட மொத்தம் 14 அரசு அலுவலகங்கள், 3 நகர் நல மையங்கள், 64 பள்ளிகள் மற்றும் 8 தனியார் வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டு, கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வின் போது, அரசு மற்றும் தனியார் வளாகங்களில் தண்ணீர் தொட்டிகள், சின்டெக்ஸ் தொட்டிகள் ஆகியவை முறையாக மூடி வைக்கப்பட்டுள்ளதா எனவும், மழைநீர் தேங்கி உள்ளனவா எனவும், சமையல் அறையில் தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள் முறையாக மூடி வைக்கப்பட்டுள்ளனவா எனவும், பள்ளி வளாகங்களில் தேவையற்ற பிளாஸ்டிக் கப்புகள், பேப்பர் கப்புகள் உள்ளனவா எனவும் ஆய்வு செய்யப்பட்டது.



தொடர்ந்து, உபயோகமற்ற பொருட்கள், உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள், பேப்பர் கப்புகள் மற்றும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், இன்று நடைபெற்ற கொசு ஒழிப்பு பணிகளின் போது குறிப்பாக வார்டு எண்.23 ஆர்.எஸ்.புரம் பாரதி வித்யா பவன் பள்ளி, வார்டு எண்.72 ஓய்.டபுள்யூ.சி.ஏ பள்ளி, வார்டு எண்.17 கல்வீராம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, பி.எஸ்.ஜி.சர்வஜனா பள்ளி மற்றும் செல்வபுரம் பாலவிகாஸ் ஆகிய பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு, டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



மேலும், கோவை மாநராட்சி சார்பாக ஒவ்வொரு வியாழக் கிழமைகளிலும் “ஏடிஸ் கொசு ஒழிப்பு தினம்” கடைபிடிக்கப்படும் எனவும், பொதுமக்கள் அனைவரும் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்துக்கொண்டு, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு  முழு ஒத்துழைப்பு நல்குமாறு மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...