வனவிலங்கு வாரவிழா ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது. நடப்பாண்டிற்கான வன விலங்கு வாரவிழாவினை முன்னிட்டு நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற வனவிலங்கு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. இதன் நிறைவு நாளான இன்று நேதாஜி ஸ்நேக் டிரஸ்ட் சார்பாக கை வில்லைகள் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உதகை தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உதகை நகர காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் கலந்துகொண்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வனம் மற்றும் வனவிலங்கு குறித்த வாசகங்கள் பொறித்த கை வில்லைகளை கட்டினார்.
இந்நிகழ்ச்சியில், அமைப்பின் தலைவர் லாரன்ஸ் மற்றும் நேதாஜி ஸ்நேக் டிரஸ்ட்டை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற வனவிலங்கு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. இதன் நிறைவு நாளான இன்று நேதாஜி ஸ்நேக் டிரஸ்ட் சார்பாக கை வில்லைகள் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உதகை தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உதகை நகர காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் கலந்துகொண்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வனம் மற்றும் வனவிலங்கு குறித்த வாசகங்கள் பொறித்த கை வில்லைகளை கட்டினார்.
இந்நிகழ்ச்சியில், அமைப்பின் தலைவர் லாரன்ஸ் மற்றும் நேதாஜி ஸ்நேக் டிரஸ்ட்டை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.