மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை கட்டுப்படுத்த முழுமையான மதுவிலக்கே நிரந்தர தீர்வு என்றும், கள்ளுக்கு அனுமதி வழங்கி விவசாயிகளுக்கு மாற்று வாழ்வாதாரம் ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


கோவை:

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் (கொமதேக) தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக அரசுக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் தனது கட்சியின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், தேர்தலில் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கும், ஆதரவு அளித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த தேர்தலில் கொமதேக இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் நித்தியானந்தம் சட்டமன்றத்தில் சிறப்பாக செயல்படுவார் என்றும், கொங்கு மண்டல வளர்ச்சிக்காக தங்களது குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும், கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும், அவிநாசி சாலை மேம்பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளங்களையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதிமுக தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தலில் வெற்றி-தோல்வி என்பது அரசியலில் இயல்பானது என்றும், தோல்விக்குப் பிறகு கட்சியை பிரிப்பதை விட ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்றும் தெரிவித்தார்.

முதல்வர் விஜய் முதல் கட்டமாக சில டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது குறித்து பேசிய ஈஸ்வரன், அந்த நடவடிக்கையை வரவேற்றாலும், கடைகள் மூடப்பட்ட இடங்களில் சட்டவிரோத “சந்து கடைகள்” உருவாகும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

சில கடைகளை மூடுவதால் மட்டும் மது பழக்கத்தை குறைக்க முடியாது என்றும், டாஸ்மாக் வருமானம் குறையாமல் இருந்தால் விற்பனை குறையவில்லை என்பதற்கே அது சான்று என்றும் அவர் கூறினார். மாநிலத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தி, கள்ளுக்கு அனுமதி வழங்குவதன் மூலம் விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.

Newsletter

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சே...

சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி...

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...