கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் டெங்கு தடுப்பு தின நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான துப்புரவு பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்று டெங்கு தடுப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ஹரிஹரன் கூறியதாவது:-
டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படிப்படியாக டெங்கு பாதிப்புகள் குறைந்து வருகிறது. சுகாதாரத் துறை அதிகாரிகள் தேவையற்ற விடுமுறைகள் எடுப்பதை தவிர்க்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், தனியார் மருத்துவமனைகளில் டெங்கு அறிகுறிகளுடன் வருபவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. டெங்கு ஒழிப்பு பணிகளில் அதிகளவில் சுகாதார பணியாளர்களை ஈடுபடுத்தி உள்ளோம் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், உதவி ஆட்சியர் சரண்யாஹரி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பானுமதி, மாநகராட்சி மருத்துவ அலுவலர் சந்தோஷ்குமார், மாநகராட்சி உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி இயக்குநர்கள் பத்மாவதி, கணேஷ்ராம் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் டெங்கு தடுப்பு தின நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான துப்புரவு பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்று டெங்கு தடுப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ஹரிஹரன் கூறியதாவது:-
டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படிப்படியாக டெங்கு பாதிப்புகள் குறைந்து வருகிறது. சுகாதாரத் துறை அதிகாரிகள் தேவையற்ற விடுமுறைகள் எடுப்பதை தவிர்க்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், தனியார் மருத்துவமனைகளில் டெங்கு அறிகுறிகளுடன் வருபவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. டெங்கு ஒழிப்பு பணிகளில் அதிகளவில் சுகாதார பணியாளர்களை ஈடுபடுத்தி உள்ளோம் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், உதவி ஆட்சியர் சரண்யாஹரி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பானுமதி, மாநகராட்சி மருத்துவ அலுவலர் சந்தோஷ்குமார், மாநகராட்சி உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி இயக்குநர்கள் பத்மாவதி, கணேஷ்ராம் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.