கோவை கோட்டத்திற்குட்பட்ட கோவை,ஈரோடு,திருப்பூர், நீலகிரி ஆகிய 4 மாவட்ட அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்,நடத்துனர் , மற்று பணியாளர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் வெறும் 50 சதவீதம் மட்டுமே இன்று வழங்கப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியத்தை அரசு தவணை முறையில் வழங்கி வந்ததாகவும், இதனால் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடுவதாக தெரிவித்த தொழிலாளர்கள், இதனை கண்டித்து நாளை பேருந்துகளை இயக்க போவதில்லை என அனைத்து தொழிற்சங்கம் சார்பாக அறிவிக்கபட்டுள்ளது.
இதுகுறித்து சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் கூறுகையில், கோவை கோட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே முழு ஊதிய வழங்கபடுவதாகவும் மற்ற தொழிலாளர்களுக்கு தவனை முறையிலே ஊதிய கிடைக்கப்பெறுவதாக தெரிவித்தவர்கள், இன்று இரவுக்குள் முழு ஊதியம் கிடைக்க பெறாவிட்டால் நாளை கோவை கோட்டத்தை சேர்ந்த 18 ஆயிரம் பணியாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் கூறுகையில், கோவை கோட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே முழு ஊதிய வழங்கபடுவதாகவும் மற்ற தொழிலாளர்களுக்கு தவனை முறையிலே ஊதிய கிடைக்கப்பெறுவதாக தெரிவித்தவர்கள், இன்று இரவுக்குள் முழு ஊதியம் கிடைக்க பெறாவிட்டால் நாளை கோவை கோட்டத்தை சேர்ந்த 18 ஆயிரம் பணியாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர்.