கோவை கோட்ட போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இன்று இரவுக்குள் முழு ஊதிய வழங்காவிட்டால் நாளை பேருந்துகளை இயக்க போவதில்லை என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

கோவை கோட்டத்திற்குட்பட்ட கோவை,ஈரோடு,திருப்பூர், நீலகிரி ஆகிய 4 மாவட்ட அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்,நடத்துனர் , மற்று பணியாளர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் வெறும் 50 சதவீதம் மட்டுமே இன்று வழங்கப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியத்தை அரசு தவணை முறையில் வழங்கி வந்ததாகவும், இதனால் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடுவதாக தெரிவித்த தொழிலாளர்கள், இதனை கண்டித்து  நாளை பேருந்துகளை இயக்க போவதில்லை என அனைத்து தொழிற்சங்கம் சார்பாக அறிவிக்கபட்டுள்ளது. 

இதுகுறித்து சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் கூறுகையில், கோவை கோட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே முழு ஊதிய வழங்கபடுவதாகவும் மற்ற தொழிலாளர்களுக்கு தவனை முறையிலே ஊதிய கிடைக்கப்பெறுவதாக தெரிவித்தவர்கள், இன்று இரவுக்குள் முழு ஊதியம் கிடைக்க பெறாவிட்டால் நாளை கோவை கோட்டத்தை சேர்ந்த  18 ஆயிரம் பணியாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...