மக்கள் நலன்காக்கத் தவறிய தமிழக அரசை பதவி விலகக் கோரி கோவையில் சிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழக நலன்களை பாதுகாக்கத் தவறிய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசை உடனடியாக பதவி விலக வலியுறுத்தி கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த தவறியதோடு அதனை மீட்க தவறிய தமிழக அரசு பதவி விலகக் கோரி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மாநில பொருளாளர் ஆறுமுகம், மக்கள் மட்டும்மல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் இழந்து விட்ட தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும். வரிவசூல் என்ற பெயரால் மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வரும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்றார்.

இதையடுத்து, ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அவரை உடனிருந்தவர்களும், காவல்துறையினரும் இணைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...