மக்கள் நலன்காக்கத் தவறிய தமிழக அரசை பதவி விலகக் கோரி கோவையில் சிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழக நலன்களை பாதுகாக்கத் தவறிய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசை உடனடியாக பதவி விலக வலியுறுத்தி கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த தவறியதோடு அதனை மீட்க தவறிய தமிழக அரசு பதவி விலகக் கோரி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மாநில பொருளாளர் ஆறுமுகம், மக்கள் மட்டும்மல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் இழந்து விட்ட தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும். வரிவசூல் என்ற பெயரால் மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வரும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்றார்.

இதையடுத்து, ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அவரை உடனிருந்தவர்களும், காவல்துறையினரும் இணைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...