காந்தியின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு கதர் அங்காடியில் சிறப்பு விற்பனை துவக்கம்

காந்தியின் 148-வது பிறந்தநாளினை முன்னிட்டு கோவையில் கதர் அங்காடியில் சிறப்பு விற்பனையினை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று துவக்கி வைத்தார்.



மத்திய அரசின் கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் கதர் விற்பனை நிலைய அங்காடியில் விழாக்காலங்களை முன்னிட்டு சிறப்பு விற்பனைகள் துவங்கப்படுவது வழக்கம். அதன்படி, இன்று காந்தி ஜெயந்தியினை முன்னிட்டு கோவையில் செயல்பட்டு வரும் கதர் பவனில் மாவட்ட ஆட்சியர் சிறப்பு விற்பனையினை துவக்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து ஆட்சியர் பேசுகையில், தீபாவளி தினத்தினை முன்னிட்டு கதர் ஆடைகளுக்கு 30 சதவிகிதம், பட்டு ரகங்களுக்கு 30 சதவிகிதம், பாலியீஸ்டர் துணிகளுக்கு 30 சதவிகிதம், உள்ளன் ரக ஆடைகளுக்கு 20 சதவிகிதம் என சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



அவிநானி சாலையில் செயல்பட்டு வரும் பிரதான கதர் அங்காடி, ஆர்.எஸ்.புரம், பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி, உதகை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கதர் அங்காடியில் இந்த தள்ளுபடிகள் உள்ளன.

கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனையில் 1.69 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 1.52 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது. 

பொதுமக்கள் கதர் அங்காடியின் சிறப்பு விற்பனைக்கு தங்களது ஆதரவினைத் தர வேண்டும்.

இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த ஆண்டு 1.69 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது நடப்பு ஆண்டிற்கு 1.52 கோடி ரூபாய் என குறைக்கப்பட்டுள்ளது கதர் ஆடைகளின் பயன்பாடு குறைந்து வருவதை உணர்த்துகிறது. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நாகரீக உடைகளின் பயன்பாட்டினாலேயே கதர் பயன்பாடு குறைந்துள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...