கோவை மதுக்கரையில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர் கைது

தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகளின் நேரம் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே மதுபாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். 

கோவை மாவட்டம் மதுக்கரையில் சட்டவிரோமாக மது விற்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இளைஞரை, கிராம மக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மதுக்கடை திறப்பதற்கு முன்பே கல்குவாரிகளிலும், பெட்டிக் கடைகளிலும் மதுபாட்டிலை பதுக்கி வைத்து, மதுக்கரை மக்களுக்கு விநியோகித்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். 

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து 30-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...