தமிழகத்தில் சுகாதாரத்துறை முடங்கிவிட்டது - கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வுக்குப்பின் திமுக எம்.எல்.ஏ பேட்டி


தமிழ்நாட்டில் அதிகமாக டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட விஷக்காய்ச்சல் பரவிவருவதால் பொதுமக்களில் பலருக்கு மரணமும், கடும் உடல்நிலை பாதிப்புகளும் ஏற்பட்டுவருகிறது. இதையொட்டி திமுக கழக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய அக்கழகத்தினருக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, கோவை மாநகர தெற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் சிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கோவை அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர், மருத்துவமனை ஆர்.எம்.ஓ சௌந்தரவேல்-யிடம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் திமுக சட்டமன்ற உறுப்பினர் ந.கார்த்திக் பேசியதாவது :- 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு செயலற்று கிடக்கிறது. மருத்துவத்துறையில் பின் தங்கியுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர் அந்த துறையை சரியாக கவனிக்காத காரணத்தினால் அத்துறை முடங்கியுள்ளது. அதன் சாட்சி நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். 



குறிப்பாக கோவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 

குறைவான எண்ணிக்கையை மருத்துவர்கள் மக்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், உண்மையில் பலர் டெங்குவால் உயிரிழந்து வருகின்றனர். கடந்த வாரத்தில் 8 பேர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தனர். 



மேலும், டெங்கு காய்ச்சல் மருந்து கையிருப்பில் இல்லை என்று தெரியவருகிறது. இதனால், இன்று கோவை அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அதிகாரிகளை சந்தித்தேன். ஆனால், டெங்குவால் ஏற்பட்ட உயிரிழப்பை மிக குறைவான அளவாக கணக்கு காட்டி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...