கோவையில் கடந்த 2010-ம் ஆண்டு கணபதி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ராஜவேல் என்பவரிடம் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் மோசடி செய்தாக சுகேஷ் சந்திரசேகர் மீதும் அவரது தந்தை சந்திரசேகர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே, இரட்டை இலைச் சின்னம் பெற்றுத் தர லஞ்சம் பெற்றதாக சுகேஷ் சந்திரசேகர் டெல்லி போலீஸரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், கோவை தொழிலதிபரிடம் மோசடி செய்த வழக்கில், ஆஜர்படுத்துவதற்காக டெல்லி திகார் சிறையில் இருந்து சுகேஷ் சந்திரசேகர் இன்று கோவை அழைத்து வரப்பட்டார் .கோவை இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகேஷ் சந்திரசேகரை வரும் அக்டோபர் 12ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து நீதிபதி ராஜ்குமார் உத்திரவிட்டார். இதனையடுத்து ரயில் மூலம் சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் டெல்லி அழைத்து செல்லப்பட்டார்.
இந்த நிலையில், கோவை தொழிலதிபரிடம் மோசடி செய்த வழக்கில், ஆஜர்படுத்துவதற்காக டெல்லி திகார் சிறையில் இருந்து சுகேஷ் சந்திரசேகர் இன்று கோவை அழைத்து வரப்பட்டார் .கோவை இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகேஷ் சந்திரசேகரை வரும் அக்டோபர் 12ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து நீதிபதி ராஜ்குமார் உத்திரவிட்டார். இதனையடுத்து ரயில் மூலம் சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் டெல்லி அழைத்து செல்லப்பட்டார்.