ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கைக்கு இடையூறு- குட்டையின் கரையை உடைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

கோவை சுல்தான்பேட்டை பகுதியை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் நீர்த்தேக்க குட்டை ஒன்று உள்ளது. அப்பகுதியின் நீராதாரமாக விளங்கும் இந்த நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் அங்கு நீர் தேங்காத வண்ணம் குட்டையின் கரைப்பகுதியை உடைத்துள்ளதாகவும், இதனால் சேமிக்கப்பட வேண்டிய நீர் வீணாகிவருவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



இது தொடர்பாக புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது:-

எங்கள் ஊரின் மிக முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கும் பயன்படும் வகையில் குட்டை ஒன்று உள்ளது. எங்கள் ஊர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால், குட்டை வேகமாக நிரம்பி வந்தது. ஆனால், நீர்ப்பிடிப்பு பகுதியான குட்டையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து, அங்கு நீர் தேங்காத வண்ணம் குட்டையில் கரையினை உடைத்துவிட்டு நீரை வெளியேற்றிவருகின்றனர்.



இதனால் எங்கள் பகுதியின் நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தெடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து தற்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டும்.



இவ்வாறு அப்பகுதி மக்கள் கூறினர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...