ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கைக்கு இடையூறு- குட்டையின் கரையை உடைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

கோவை சுல்தான்பேட்டை பகுதியை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் நீர்த்தேக்க குட்டை ஒன்று உள்ளது. அப்பகுதியின் நீராதாரமாக விளங்கும் இந்த நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் அங்கு நீர் தேங்காத வண்ணம் குட்டையின் கரைப்பகுதியை உடைத்துள்ளதாகவும், இதனால் சேமிக்கப்பட வேண்டிய நீர் வீணாகிவருவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



இது தொடர்பாக புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது:-

எங்கள் ஊரின் மிக முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கும் பயன்படும் வகையில் குட்டை ஒன்று உள்ளது. எங்கள் ஊர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால், குட்டை வேகமாக நிரம்பி வந்தது. ஆனால், நீர்ப்பிடிப்பு பகுதியான குட்டையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து, அங்கு நீர் தேங்காத வண்ணம் குட்டையில் கரையினை உடைத்துவிட்டு நீரை வெளியேற்றிவருகின்றனர்.



இதனால் எங்கள் பகுதியின் நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தெடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து தற்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டும்.



இவ்வாறு அப்பகுதி மக்கள் கூறினர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...