கோவை சுல்தான்பேட்டை பகுதியை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் நீர்த்தேக்க குட்டை ஒன்று உள்ளது. அப்பகுதியின் நீராதாரமாக விளங்கும் இந்த நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் அங்கு நீர் தேங்காத வண்ணம் குட்டையின் கரைப்பகுதியை உடைத்துள்ளதாகவும், இதனால் சேமிக்கப்பட வேண்டிய நீர் வீணாகிவருவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது:-
எங்கள் ஊரின் மிக முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கும் பயன்படும் வகையில் குட்டை ஒன்று உள்ளது. எங்கள் ஊர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால், குட்டை வேகமாக நிரம்பி வந்தது. ஆனால், நீர்ப்பிடிப்பு பகுதியான குட்டையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து, அங்கு நீர் தேங்காத வண்ணம் குட்டையில் கரையினை உடைத்துவிட்டு நீரை வெளியேற்றிவருகின்றனர்.

இதனால் எங்கள் பகுதியின் நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தெடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து தற்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டும்.

இவ்வாறு அப்பகுதி மக்கள் கூறினர்.
இந்த நிலையில், ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் அங்கு நீர் தேங்காத வண்ணம் குட்டையின் கரைப்பகுதியை உடைத்துள்ளதாகவும், இதனால் சேமிக்கப்பட வேண்டிய நீர் வீணாகிவருவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது:-
எங்கள் ஊரின் மிக முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கும் பயன்படும் வகையில் குட்டை ஒன்று உள்ளது. எங்கள் ஊர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால், குட்டை வேகமாக நிரம்பி வந்தது. ஆனால், நீர்ப்பிடிப்பு பகுதியான குட்டையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து, அங்கு நீர் தேங்காத வண்ணம் குட்டையில் கரையினை உடைத்துவிட்டு நீரை வெளியேற்றிவருகின்றனர்.

இதனால் எங்கள் பகுதியின் நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தெடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து தற்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டும்.

இவ்வாறு அப்பகுதி மக்கள் கூறினர்.