சிங்காநல்லூர் தொகுதிகுட்பட்ட 64 வது வட்டம் உழவர் சந்தை அருகில் உள்ள பழுதடைந்துள்ள ஹவுசிங்யூனிட் வீடுகளைப் கோவை சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டு அந்த வீடுகளில் வசித்துவரும் பொதுமக்களை நேரில் சந்தித்தார். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மின்அஞ்சல் மூலமாகவும், கடிதம் மூலமாகவும் தகவல் தெரிவித்தார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 960 அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் இங்கு உள்ளது. இந்த வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்த வீடுகளில் மக்கள் யாரும் குடியிருக்க முடியாத, வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கு வசிக்கும் பொதுமக்களிடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் உடனடியாக காலி செய்ய நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

கோவை சிங்காநல்லூர் ஹவுசிங்யூனிட் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிமக்களை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று வட்டாட்சியர், ஆர்.டி.ஓ துணைவட்டாட்சியர் ஆகியோர் போலீஸ்துணையுடன் நோட்டீஸ் கொடுத்தனர். கோவை மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ நேரில் சென்று அங்கு வசிக்கும் மக்களுக்கு, அதே இடத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்கும் வரை பாதுகாப்பான மாற்று இடம் வழங்குமாறு சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 960 அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் இங்கு உள்ளது. இந்த வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்த வீடுகளில் மக்கள் யாரும் குடியிருக்க முடியாத, வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கு வசிக்கும் பொதுமக்களிடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் உடனடியாக காலி செய்ய நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

கோவை சிங்காநல்லூர் ஹவுசிங்யூனிட் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிமக்களை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று வட்டாட்சியர், ஆர்.டி.ஓ துணைவட்டாட்சியர் ஆகியோர் போலீஸ்துணையுடன் நோட்டீஸ் கொடுத்தனர். கோவை மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ நேரில் சென்று அங்கு வசிக்கும் மக்களுக்கு, அதே இடத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்கும் வரை பாதுகாப்பான மாற்று இடம் வழங்குமாறு சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
