இரண்டு ஆண்டுகாலமாக நிலுவையில் உள்ள கல்வி உதவி நிதியை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்பு சாரா தொழிலாளர்கள் இன்று இராமநாதபுரத்தில் செயல்படும் நலவாரிய அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்தின் போது விபத்து மரணம், இயற்கை மரணம், திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம் உள்ளிட்ட கேட்பு மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும். இரண்டு ஆண்டுகாலமாக நிலுவையில் உள்ள கல்வி உதவி நிதியை உடனே வழங்க வேண்டும். 6 மாத காலமாக நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தினை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் 18 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
சிஐடியு கட்டிட கட்டுமானச் சங்க பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த முற்றுகைப் போராட்டத்தின் போது விபத்து மரணம், இயற்கை மரணம், திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம் உள்ளிட்ட கேட்பு மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும். இரண்டு ஆண்டுகாலமாக நிலுவையில் உள்ள கல்வி உதவி நிதியை உடனே வழங்க வேண்டும். 6 மாத காலமாக நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தினை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் 18 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
சிஐடியு கட்டிட கட்டுமானச் சங்க பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.