கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் ஞாயிறன்று (இன்று) நடைபெற்றது.
கோவை பத்திரிகையாளர் மன்றத்தின் 2017-18ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஞாயிறன்று (இன்று) பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இத்தேர்தலுக்கு மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார்.
இதில் மன்றத்தின் தலைவராக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் செந்தில்குமார் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியாளர் சுப்புராஜ், தினமணி புகைப்படக் கலைஞர் பேச்சிக்குமார் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், ஈநாடு டிஜிட்டல் செய்தியாளர் சீனிவாசன் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், நியூஸ் எக்ஸ் செய்தியாளர் சுதாகர், தினகரன் புகைப்படக் கலைஞர் கார்த்தீஸ்வரன் துணை செயலாளர்களாகவும், மன்றத்தின் பொருளாளராக தீக்கதிர் செய்தியாளர் அ.ர.பாபு தேர்வு செய்யப்பட்டனர்.
செயற்குழு உறுப்பினர்களாக சன் டிவி செய்தியாளர் மார்ட்டின் ராஜா, தினகரன் செய்தியாளர் சந்துரு, டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியாளர் கோமல், தீக்கதிர் செய்தியாளர் ஜீவானந்தம், நியூஸ் 7 செய்தியாளர் ஷெர்லி, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கோவை பத்திரிகையாளர் மன்றத்தின் 2017-18ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஞாயிறன்று (இன்று) பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இத்தேர்தலுக்கு மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார்.
இதில் மன்றத்தின் தலைவராக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் செந்தில்குமார் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியாளர் சுப்புராஜ், தினமணி புகைப்படக் கலைஞர் பேச்சிக்குமார் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், ஈநாடு டிஜிட்டல் செய்தியாளர் சீனிவாசன் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், நியூஸ் எக்ஸ் செய்தியாளர் சுதாகர், தினகரன் புகைப்படக் கலைஞர் கார்த்தீஸ்வரன் துணை செயலாளர்களாகவும், மன்றத்தின் பொருளாளராக தீக்கதிர் செய்தியாளர் அ.ர.பாபு தேர்வு செய்யப்பட்டனர்.
செயற்குழு உறுப்பினர்களாக சன் டிவி செய்தியாளர் மார்ட்டின் ராஜா, தினகரன் செய்தியாளர் சந்துரு, டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியாளர் கோமல், தீக்கதிர் செய்தியாளர் ஜீவானந்தம், நியூஸ் 7 செய்தியாளர் ஷெர்லி, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.