கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் ஞாயிறன்று (இன்று) நடைபெற்றது. 

கோவை பத்திரிகையாளர் மன்றத்தின் 2017-18ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஞாயிறன்று (இன்று) பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இத்தேர்தலுக்கு மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார்.

இதில் மன்றத்தின் தலைவராக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் செந்தில்குமார் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியாளர் சுப்புராஜ், தினமணி புகைப்படக் கலைஞர் பேச்சிக்குமார் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், ஈநாடு டிஜிட்டல் செய்தியாளர் சீனிவாசன் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், நியூஸ் எக்ஸ் செய்தியாளர் சுதாகர், தினகரன் புகைப்படக் கலைஞர் கார்த்தீஸ்வரன் துணை செயலாளர்களாகவும், மன்றத்தின் பொருளாளராக தீக்கதிர் செய்தியாளர் அ.ர.பாபு தேர்வு செய்யப்பட்டனர்.

செயற்குழு உறுப்பினர்களாக சன் டிவி செய்தியாளர் மார்ட்டின் ராஜா, தினகரன் செய்தியாளர் சந்துரு, டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியாளர் கோமல், தீக்கதிர் செய்தியாளர் ஜீவானந்தம், நியூஸ் 7 செய்தியாளர் ஷெர்லி, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...