கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளியில் இன்று (23.09.2017) பகுதி நேர ஆசிரியர்களுக்கான சிறப்பாசிரியர் தேர்வு நடைபெற்றது. ஆர்.எஸ்.புரம் பள்ளி மையத்தில் நடந்த இத்தேர்வில் 50-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தேர்வு எழுத வந்தவர்கள் செல்போன்களை அருகில் உள்ள ஓரு அறையில் வைக்கும்படி பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தேர்விற்கு வந்தவர்கள் செல்ப்போன்களை பள்ளியின் ஓரு அறையில் வைத்து இருந்தனர். தேர்வு முடிந்த பின்னர் செல்போன்களை எடுப்பதற்காக ஆசிரியர்கள் சென்றுள்ளனர். அப்போது, ராஜேஷ், ராஜ்குமார் உள்ளிட்ட 4 பகுதி நேர ஆசிரியர்களின் செல்போன்கள் மட்டும் காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் செல்போன் திருட்டு போனது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டடனர். ஆனால், அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டினர்.
செல்போன் திருடு போனதற்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணம் என்றும், செல்போன்கள் காணாமல் போனது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் பகுதி நேர ஆசிரியர்கள் தெரிவித்தனர்.