சிறப்பாசிரியர் தேர்வில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் செல்போன் திருட்டு


கோவை  ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளியில் இன்று (23.09.2017)  பகுதி நேர ஆசிரியர்களுக்கான சிறப்பாசிரியர் தேர்வு நடைபெற்றது. ஆர்.எஸ்.புரம் பள்ளி மையத்தில் நடந்த இத்தேர்வில் 50-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தேர்வு எழுத வந்தவர்கள் செல்போன்களை அருகில் உள்ள ஓரு அறையில் வைக்கும்படி பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தேர்விற்கு வந்தவர்கள் செல்ப்போன்களை பள்ளியின் ஓரு அறையில் வைத்து இருந்தனர். தேர்வு முடிந்த பின்னர் செல்போன்களை எடுப்பதற்காக ஆசிரியர்கள் சென்றுள்ளனர். அப்போது,  ராஜேஷ், ராஜ்குமார் உள்ளிட்ட 4  பகுதி நேர ஆசிரியர்களின் செல்போன்கள் மட்டும் காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் செல்போன் திருட்டு போனது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டடனர். ஆனால், அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டினர். 

செல்போன் திருடு போனதற்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணம் என்றும், செல்போன்கள் காணாமல் போனது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் பகுதி நேர ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...