தசைதிசைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஆடல், பாடல் நிகழ்ச்சி


கோவை, ஜென்னீஸ் கிளப்பில் உலக தசைதிசைவு நோய் விழிப்புணர்வு தின விழா எம்.டி.சி.ஆர்.சி அமைப்பின் சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. எம்.டி.சி.ஆர்.சி அமைப்பின் நிறுவனர் டாக்டர் லட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்ம விழாவில், சிறப்பு விருந்தினராக கே.ஜி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவச்சலம் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். 



இதில் 40-க்கும் மேற்பட்ட தசைதிசைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெற்றோர்கள் பங்கேற்று குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இதனைத்தொடர்ந்து, ஆடல், பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு சிறப்பு விருந்தினர் டாக்டர் பக்தவச்சலம் நினைவு பரிசு வழங்கினார்.



பின்னர், நிகழ்ச்சியில் டாக்டர் பக்தவச்சலம் பேசுகையில், எம்.டி.சி.ஆர்.சி அமைப்பின் நிறுவனர் லட்சுமி கோவையில் ஒரு மகத்தான சேவையை செய்து வருகிறார். இவரை கடவுளின் தூதர் என்று கூறலாம். இங்கு தசைதிசைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இதுபோன்று நடத்தப்படும் கலை நிகழ்ச்சியின் மூலம் அவர்கள் மனதளவில் மிகுந்த மகிழ்ச்சி பெறுவார்கள். இதனை பார்க்கும் போது பெற்றோர்களின் கவலையும் குறையும் என்றார். 



மேலும், இதுபோன்ற உன்னதமான சேவையை கோவையில் செய்துவரும் எம்.டி.சி.ஆர்.சி அமைப்பின் சேவை தொடர வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...