கோவை, ஜென்னீஸ் கிளப்பில் உலக தசைதிசைவு நோய் விழிப்புணர்வு தின விழா எம்.டி.சி.ஆர்.சி அமைப்பின் சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. எம்.டி.சி.ஆர்.சி அமைப்பின் நிறுவனர் டாக்டர் லட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்ம விழாவில், சிறப்பு விருந்தினராக கே.ஜி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவச்சலம் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இதில் 40-க்கும் மேற்பட்ட தசைதிசைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெற்றோர்கள் பங்கேற்று குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இதனைத்தொடர்ந்து, ஆடல், பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு சிறப்பு விருந்தினர் டாக்டர் பக்தவச்சலம் நினைவு பரிசு வழங்கினார்.

பின்னர், நிகழ்ச்சியில் டாக்டர் பக்தவச்சலம் பேசுகையில், எம்.டி.சி.ஆர்.சி அமைப்பின் நிறுவனர் லட்சுமி கோவையில் ஒரு மகத்தான சேவையை செய்து வருகிறார். இவரை கடவுளின் தூதர் என்று கூறலாம். இங்கு தசைதிசைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இதுபோன்று நடத்தப்படும் கலை நிகழ்ச்சியின் மூலம் அவர்கள் மனதளவில் மிகுந்த மகிழ்ச்சி பெறுவார்கள். இதனை பார்க்கும் போது பெற்றோர்களின் கவலையும் குறையும் என்றார்.

மேலும், இதுபோன்ற உன்னதமான சேவையை கோவையில் செய்துவரும் எம்.டி.சி.ஆர்.சி அமைப்பின் சேவை தொடர வாழ்த்துக்கள் தெரிவித்தார்.