'நதிகளை மீட்போம்' பேரணியின் விழிப்புணர்வு பிரச்சாரம் செப்டம்பர் 20-ம் தேதி குஜராத் சபர்மதி நதி அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜட்கி வாசுதேவ், குஜராத் மாநில முதலமைச்சர் விஜய்ரூபாணி, குஜராத் மாநில கல்வித் துறை அமைச்சர் பூபேந்திரசிங்ம்ஹுபா சுதாசமா, தேசிய விருது பெற்ற விவசாயி கெனபை படேல், நடிகர் மனோஜ்ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஜட்கி வாசுதேவ் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

8000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நதிகளை மீட்போம் பிரச்சார நிகழ்ச்சியில் குஜராத் மாநில முதலமைச்சர் பேசியதாவது:-
குஜராத் மாநில அரசும் மக்களும் 'நதிகளை மீட்போம்' பேரணியை வரவேற்கிறோம். நதிகளை மீட்போம் இயக்கத்திற்கு தங்கள் ஆதரவையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதனைத்தொடர்ந்து, ஜட்கி வாசுதேவ் பேசுகையில், நம் தேசத்தில் இப்போது வளர்ந்துவரும் அரசியல் ஒற்றுமை இந்த நதிகளை மீட்போம் இயக்கத்தின் மூலம் வெளிப்படுகிறது. மேலும் நதிகளை மீட்க தங்களது ஆதரவினை வேண்டி 16 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியபோது உடனடியாக பதிலளித்தவர்களிள் குஜராத் முதலமைச்சர் ஒருவர் என்றார்.

தொடர்ந்து, குஜராத்தின் நதிகளை மீட்க குஜராத் அரசாங்கம் ஈஷா அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாற்றிகொண்டது.
முன்னதாக ஜட்கி வாசுதேவ் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

8000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நதிகளை மீட்போம் பிரச்சார நிகழ்ச்சியில் குஜராத் மாநில முதலமைச்சர் பேசியதாவது:-
குஜராத் மாநில அரசும் மக்களும் 'நதிகளை மீட்போம்' பேரணியை வரவேற்கிறோம். நதிகளை மீட்போம் இயக்கத்திற்கு தங்கள் ஆதரவையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதனைத்தொடர்ந்து, ஜட்கி வாசுதேவ் பேசுகையில், நம் தேசத்தில் இப்போது வளர்ந்துவரும் அரசியல் ஒற்றுமை இந்த நதிகளை மீட்போம் இயக்கத்தின் மூலம் வெளிப்படுகிறது. மேலும் நதிகளை மீட்க தங்களது ஆதரவினை வேண்டி 16 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியபோது உடனடியாக பதிலளித்தவர்களிள் குஜராத் முதலமைச்சர் ஒருவர் என்றார்.

தொடர்ந்து, குஜராத்தின் நதிகளை மீட்க குஜராத் அரசாங்கம் ஈஷா அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாற்றிகொண்டது.