நதிகளை மீட்கும் முயற்சியில் ஈஷாவுடன் கைகோர்த்த குஜராத் அரசாங்கம்

'நதிகளை மீட்போம்' பேரணியின் விழிப்புணர்வு பிரச்சாரம் செப்டம்பர் 20-ம் தேதி குஜராத் சபர்மதி நதி அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜட்கி வாசுதேவ், குஜராத் மாநில முதலமைச்சர் விஜய்ரூபாணி, குஜராத் மாநில கல்வித் துறை அமைச்சர் பூபேந்திரசிங்ம்ஹுபா சுதாசமா, தேசிய விருது பெற்ற விவசாயி கெனபை படேல், நடிகர் மனோஜ்ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஜட்கி வாசுதேவ் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.



8000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நதிகளை மீட்போம் பிரச்சார நிகழ்ச்சியில் குஜராத் மாநில முதலமைச்சர் பேசியதாவது:-

குஜராத் மாநில அரசும் மக்களும் 'நதிகளை மீட்போம்' பேரணியை வரவேற்கிறோம். நதிகளை மீட்போம் இயக்கத்திற்கு தங்கள் ஆதரவையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.



இதனைத்தொடர்ந்து, ஜட்கி வாசுதேவ் பேசுகையில், நம் தேசத்தில் இப்போது வளர்ந்துவரும் அரசியல் ஒற்றுமை இந்த நதிகளை மீட்போம் இயக்கத்தின் மூலம் வெளிப்படுகிறது. மேலும் நதிகளை மீட்க தங்களது ஆதரவினை வேண்டி 16 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியபோது உடனடியாக பதிலளித்தவர்களிள் குஜராத் முதலமைச்சர் ஒருவர் என்றார்.



தொடர்ந்து, குஜராத்தின் நதிகளை மீட்க குஜராத் அரசாங்கம் ஈஷா அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாற்றிகொண்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...