கோவை சரவணம்பட்டியை அடுத்த அண்ணாநகர் குட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சிவபாலன். இவருக்கு கடந்த சில வருடங்களாக குடிப்பழக்கம் இருந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சிவபாலன் மாயமாகியுள்ளார். இதனிடையே, அவரது வீட்டினுள் இருந்து இன்று துர்நாற்றம் வீசவே அக்கம்பக்கத்தினர் சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது சிவபாலன் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
முழுவதும் சிதைந்த நிலையில் இருந்த அவரது உடலை பார்த்த போலீசார், அவர் இறந்து 4 மாதங்கள் வரை இருக்கலாம் என்று கூறினர்.
தொடர்ந்து, சிவபாலனின் உடலை மீட்ட போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சிவபாலன் மாயமாகியுள்ளார். இதனிடையே, அவரது வீட்டினுள் இருந்து இன்று துர்நாற்றம் வீசவே அக்கம்பக்கத்தினர் சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது சிவபாலன் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
முழுவதும் சிதைந்த நிலையில் இருந்த அவரது உடலை பார்த்த போலீசார், அவர் இறந்து 4 மாதங்கள் வரை இருக்கலாம் என்று கூறினர்.
தொடர்ந்து, சிவபாலனின் உடலை மீட்ட போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.