கோவையில் 4 மாதங்களாக வீட்டில் கிடந்த சடலம்: போலீசார் விசாரணை

கோவை சரவணம்பட்டியை அடுத்த அண்ணாநகர் குட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சிவபாலன். இவருக்கு கடந்த சில வருடங்களாக குடிப்பழக்கம் இருந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சிவபாலன் மாயமாகியுள்ளார். இதனிடையே, அவரது வீட்டினுள் இருந்து இன்று துர்நாற்றம் வீசவே அக்கம்பக்கத்தினர் சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது சிவபாலன் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

முழுவதும் சிதைந்த நிலையில் இருந்த அவரது உடலை பார்த்த போலீசார், அவர் இறந்து 4 மாதங்கள் வரை இருக்கலாம் என்று கூறினர்.

தொடர்ந்து, சிவபாலனின் உடலை மீட்ட போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...