கோவையில் 4 மாதங்களாக வீட்டில் கிடந்த சடலம்: போலீசார் விசாரணை

கோவை சரவணம்பட்டியை அடுத்த அண்ணாநகர் குட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சிவபாலன். இவருக்கு கடந்த சில வருடங்களாக குடிப்பழக்கம் இருந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சிவபாலன் மாயமாகியுள்ளார். இதனிடையே, அவரது வீட்டினுள் இருந்து இன்று துர்நாற்றம் வீசவே அக்கம்பக்கத்தினர் சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது சிவபாலன் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

முழுவதும் சிதைந்த நிலையில் இருந்த அவரது உடலை பார்த்த போலீசார், அவர் இறந்து 4 மாதங்கள் வரை இருக்கலாம் என்று கூறினர்.

தொடர்ந்து, சிவபாலனின் உடலை மீட்ட போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...