மாநகராட்சியின் பல்வேறு வரி உயர்வைக் கண்டித்து சிபிஎம் கட்சியினர் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை


கோவை மாநகராட்சி நிர்வாகம் சமீபத்தில் வீடுகளுக்கு வரி மறு சீராய்வு, குடிநீர் வைப்புத் தொகை உயர்வு, குப்பைக்கு வரி விதிப்பு உள்ளிட்ட புதிய வரிகளையும், வரி உயர்வினையும் அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, இன்று கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இந்த முற்றுகைப் போராட்டத்தின் போது கோவை மாநகரத்தில் உள்ள அணைத்து வீடுகளையும் மறு அளவீடு செய்து 13.5 ஆண்டுகளுக்கான வரி விதிப்பு செய்துள்ளதை திரும்பப் பெற வேண்டும். குடிநீருக்கான வைப்பத் தொகையை ரூ.2 ஆயிரம் முதல் 7500 வரை உயத்தியுள்ளதை திரும்பப் பெற வேண்டும். மேலும், வீடுகளில் குப்பைகளுக்கு ரூ.20 முதல் 200 வரை வரிவிதிக்கப்பட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

மேலும், தேர்வு செய்யப்பட்ட மாமன்றம் இல்லாத நிலையில் மக்கள் பிரநிதிகள் மற்றும் மக்களிடம் ஏதும் கருத்துக்களை கேட்காமல் மாநகராட்சி அதிகாரிகளே வரிகளை உயர்த்தியதற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.



முன்னதாக மாநகராட்சி அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் சிபிஎம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கண்டன உரையாற்றினார். கோவை மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி உள்ளிட்டு 100-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...