ராம்நகரில் குழாய் உடைந்ததால் சாலையில் தேங்கிய குடிநீர்

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ராம்நகர் போக்குவரத்து மிகுந்த பகுதியாகும். டவுன் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்து நிலையம் அருகிலேயே இருப்பதால், எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்.



இந்நிலையில், ராம்நகரில் உள்ள செங்குப்தா வீதியில் குடிநீர் குழாய் உடைந்ததால், தண்ணீர் வெள்ளம் போல சாலையில் தேங்கியது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

இது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் சுபாஷினி ஈஸ்வர் என்பவர், சாலையில் குடிநீர் வீணாகி கிடக்கும் காட்சிகளை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார். கடந்த வாரம் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியை ஊழியர்கள் சரியாக மூடாததே, குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் தேங்கிக் கிடப்பதற்கு காரணம் என அவர் குற்றம்சாட்டியிருந்தார். 



அந்தப் பகுதியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மழைக்காலத்தில் நீர் இவ்வாறு தேங்கியுள்ளது. இது போன்ற ஊழியர்களின் அலட்சியத்தால் நீர் வீணாகிக் கொண்டிருந்தால், கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலவி வந்த கடும் வறட்சியை மீண்டும் சந்திக்க நேரிடும். எனவே, நீரை சேமிப்பது அனைவரின் அத்தியாயக் கடமையாகும். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...