கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ராம்நகர் போக்குவரத்து மிகுந்த பகுதியாகும். டவுன் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்து நிலையம் அருகிலேயே இருப்பதால், எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

இந்நிலையில், ராம்நகரில் உள்ள செங்குப்தா வீதியில் குடிநீர் குழாய் உடைந்ததால், தண்ணீர் வெள்ளம் போல சாலையில் தேங்கியது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் சுபாஷினி ஈஸ்வர் என்பவர், சாலையில் குடிநீர் வீணாகி கிடக்கும் காட்சிகளை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார். கடந்த வாரம் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியை ஊழியர்கள் சரியாக மூடாததே, குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் தேங்கிக் கிடப்பதற்கு காரணம் என அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

அந்தப் பகுதியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மழைக்காலத்தில் நீர் இவ்வாறு தேங்கியுள்ளது. இது போன்ற ஊழியர்களின் அலட்சியத்தால் நீர் வீணாகிக் கொண்டிருந்தால், கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலவி வந்த கடும் வறட்சியை மீண்டும் சந்திக்க நேரிடும். எனவே, நீரை சேமிப்பது அனைவரின் அத்தியாயக் கடமையாகும்.

இந்நிலையில், ராம்நகரில் உள்ள செங்குப்தா வீதியில் குடிநீர் குழாய் உடைந்ததால், தண்ணீர் வெள்ளம் போல சாலையில் தேங்கியது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் சுபாஷினி ஈஸ்வர் என்பவர், சாலையில் குடிநீர் வீணாகி கிடக்கும் காட்சிகளை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார். கடந்த வாரம் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியை ஊழியர்கள் சரியாக மூடாததே, குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் தேங்கிக் கிடப்பதற்கு காரணம் என அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

அந்தப் பகுதியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மழைக்காலத்தில் நீர் இவ்வாறு தேங்கியுள்ளது. இது போன்ற ஊழியர்களின் அலட்சியத்தால் நீர் வீணாகிக் கொண்டிருந்தால், கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலவி வந்த கடும் வறட்சியை மீண்டும் சந்திக்க நேரிடும். எனவே, நீரை சேமிப்பது அனைவரின் அத்தியாயக் கடமையாகும்.