கோவை கணபதிபுதூர் பகுதியை சேர்ந்தவர் காதர் பாட்ஷா. இவரது மகள் தாஜ் (10). இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தது.
அதன்பேரில், கோவை அரசு மருத்துவமனையில் இரத்த பரிசோதனை செய்தபோது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி தாஜ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த சனிக்கிழமை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததும், டெங்கு காய்ச்சலால் கோவையில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.