கண்ணாடி கருவிகள் தயாரிப்பு இலவச பயிற்சி - ஆர்வமுள்ள மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

தமிழ்நாடு அரசின் தொழில் வணிகத்துறையை சேர்ந்த அரசினர் அறிவியல் கண்ணாடி கருவிகள் பயிற்சி நிலையம், அறிவியல் கண்ணாடி கருவிகள் தயாரிப்பதில் 2 மாதம் மற்றும்  11 மாதம் திறன் மேம்பாடு பயிற்சி படிப்புகளை துவங்க உள்ளது. இப்பயிற்சி நிலையம் அவினாசி சாலை சிட்ரா அருகில் மண்டல சோதனை ஆய்வுக் கூட வளாகத்தில் உள்ளது. 

11 மாத பயிற்சியில் சேர விரும்புவோர் 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 01.09.2017 அன்று முதல் 15 முதல் 20 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பு 3 ஆண்டுகள் தளர்த்தப்படும். 11 மாத பயிற்சிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

இரண்டு மாத குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு 17 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். 2 மாத பயிற்சிக்கு வயது உச்ச வரம்பு மற்றும் உதவித் தொகை கிடையாது. தொழிற்சாலைகள் மூலம் பரிந்துரைக்கப்படும் பணியாட்களும் 2 மாத பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இப்பயிற்சி பெறுவோருக்கு விடுதி வசதிகள் கிடையாது.

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கண்காணிப்பாளர், அரசினர் அறிவியல் கண்ணாடி கருவிகள் பயிற்சி நிலையம், விமான நிலையம் அஞ்சல், கோயம்புத்தூர் -641014 என்ற பெயரில் 01.09.2017-க்குப்பின் தேதியிட்ட ரூ.10-க்கு குறுக்கு கோடிட்ட அஞ்சல் ஆணையுடன் ரூ.5-க்கு அஞ்சல் தலை ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட 10 x 23 செ.மீ. உறையுடன் இணைத்து அனுப்பி விண்ணப்ப படிவத்தினை உரிய இணைப்புகளுடன் மேற்கண்ட முகவரிக்கு 27.09.2017 தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களைப் பெற பின்வரும் அலைபேசிகளில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். 9698449372, 9789902171, 9444166766, 9842559335

ஆர்வமுள்ள மாணவர்கள் இப்பயிற்சியில் சேர்ந்து படித்து பயன் பெற முன்வருமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...