உழவர் சந்தைகளில் நடைபெறும் முறைகேடுகளை போக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என கூறி காய்கறிகளை மாலையாக அணிந்து வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். மேலும், குறைபாடுகளை தெரிவித்து அதிகாரிகளிடம் மனு அளித்தால், விவசாயிகள் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாக்கபடுவதாக மனுவில் தெரிவிக்கபட்டிருந்தது.

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், விவசாயிகள் தேவைக்காக வைக்கபட்டுள்ள குளிர்பதன கிடங்கில் காய்கறி, பழங்களை பாதுகாக்க அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும். உழவர் சந்தையில் உள்ள காய்கறி கழிவுகளை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்கவும், மண்புழு உரம் தயாரிக்க அரசு தனி இடம் அளித்தும் உரங்கள் தயார்படுத்தாமல் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி குப்பை மேடாக காட்சி அளிக்கின்றனர்.

காய்கறி, பழங்களை பாதுகாக்க குளிர்பதன விவசாயிகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். அதிகாரிகள் வருகை குறித்து கைரேகை பதிவு இயந்திரம் சரவர இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட உழவர் சந்தையில் நிகழும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், விவசாயிகள் தேவைக்காக வைக்கபட்டுள்ள குளிர்பதன கிடங்கில் காய்கறி, பழங்களை பாதுகாக்க அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும். உழவர் சந்தையில் உள்ள காய்கறி கழிவுகளை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்கவும், மண்புழு உரம் தயாரிக்க அரசு தனி இடம் அளித்தும் உரங்கள் தயார்படுத்தாமல் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி குப்பை மேடாக காட்சி அளிக்கின்றனர்.

காய்கறி, பழங்களை பாதுகாக்க குளிர்பதன விவசாயிகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். அதிகாரிகள் வருகை குறித்து கைரேகை பதிவு இயந்திரம் சரவர இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட உழவர் சந்தையில் நிகழும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.