கண்துடைப்பிற்கா குறைதீர்ப்பு முகாம் ? காதில் பூசுற்றும் அதிகாரிகள்..!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்துடைப்பிற்காக குறைதீர்ப்பு கூட்டம் நடத்துவதாகக் குற்றஞ்சாட்டி கோவை மாவட்டம், இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்னும் இளைஞர் காதில் பூ சுற்றிக் கொண்டு இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மணிகண்டன் கூறியதாவது:-

"கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்களது புகார், குறைகளை மனுக்களாக ஆட்சியரிடம் வழங்கி வருகின்றனர்.

ஆனால், அவ்வாறு வழங்கப்படும் மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்களா என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. அளித்துள்ள மனுவின் மீது நடவடிக்கை குறித்து ஆட்சியரின் உதவியாளர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டாலும் உரிய பதில் வருவதில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் குறைதீர்ப்பு கூட்டத்தில் மக்கள் வழங்கியுள்ள மனுவின் மீது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து கேள்வியெழுப்பினாலும் முறையான தகவல் இல்லை.

எங்களது மனுவின் மீது நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் எதற்காக குறைதீர்ப்பு கூட்டம் நடத்தி மனுக்கள் பெறுகிறார்கள் என்பதே தெரியவில்லை. மனுக்களை பெரும் ஆட்சியர் அதனை உரிய அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடுகிறாரா? அல்லது அந்த மனுக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்படுகிறதா? இல்லை மக்கள் நலனுடன் ஆட்சியர் செல்படுகிறார் என பொதுமக்கள் காதில் பூ சுத்துவதற்காக இந்த குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறதா என பல்வேறு கேள்விகள் உள்ளன" என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...