கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்துடைப்பிற்காக குறைதீர்ப்பு கூட்டம் நடத்துவதாகக் குற்றஞ்சாட்டி கோவை மாவட்டம், இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்னும் இளைஞர் காதில் பூ சுற்றிக் கொண்டு இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மணிகண்டன் கூறியதாவது:-
"கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்களது புகார், குறைகளை மனுக்களாக ஆட்சியரிடம் வழங்கி வருகின்றனர்.
ஆனால், அவ்வாறு வழங்கப்படும் மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்களா என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. அளித்துள்ள மனுவின் மீது நடவடிக்கை குறித்து ஆட்சியரின் உதவியாளர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டாலும் உரிய பதில் வருவதில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் குறைதீர்ப்பு கூட்டத்தில் மக்கள் வழங்கியுள்ள மனுவின் மீது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து கேள்வியெழுப்பினாலும் முறையான தகவல் இல்லை.
எங்களது மனுவின் மீது நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் எதற்காக குறைதீர்ப்பு கூட்டம் நடத்தி மனுக்கள் பெறுகிறார்கள் என்பதே தெரியவில்லை. மனுக்களை பெரும் ஆட்சியர் அதனை உரிய அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடுகிறாரா? அல்லது அந்த மனுக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்படுகிறதா? இல்லை மக்கள் நலனுடன் ஆட்சியர் செல்படுகிறார் என பொதுமக்கள் காதில் பூ சுத்துவதற்காக இந்த குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறதா என பல்வேறு கேள்விகள் உள்ளன" என்றார்.
இதுகுறித்து மணிகண்டன் கூறியதாவது:-
"கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்களது புகார், குறைகளை மனுக்களாக ஆட்சியரிடம் வழங்கி வருகின்றனர்.
ஆனால், அவ்வாறு வழங்கப்படும் மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்களா என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. அளித்துள்ள மனுவின் மீது நடவடிக்கை குறித்து ஆட்சியரின் உதவியாளர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டாலும் உரிய பதில் வருவதில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் குறைதீர்ப்பு கூட்டத்தில் மக்கள் வழங்கியுள்ள மனுவின் மீது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து கேள்வியெழுப்பினாலும் முறையான தகவல் இல்லை.
எங்களது மனுவின் மீது நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் எதற்காக குறைதீர்ப்பு கூட்டம் நடத்தி மனுக்கள் பெறுகிறார்கள் என்பதே தெரியவில்லை. மனுக்களை பெரும் ஆட்சியர் அதனை உரிய அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடுகிறாரா? அல்லது அந்த மனுக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்படுகிறதா? இல்லை மக்கள் நலனுடன் ஆட்சியர் செல்படுகிறார் என பொதுமக்கள் காதில் பூ சுத்துவதற்காக இந்த குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறதா என பல்வேறு கேள்விகள் உள்ளன" என்றார்.