நாட்டில் பயணிகள் கடும் சோதனைக்குட்படுத்தப்படும் 17 விமான நிலையங்களில், கோவை விமான நிலையமும் இணைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு சொந்தமான பைகளில் சோதனைகளுக்கு பிறகு விமானப் பாதுகாப்பு அமைப்பினர் முத்திரை அச்சிடுகின்றனர்.
கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த முறையை விமான போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் விமானப் பாதுகாப்பு அமைப்பினரும் இணைந்து தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரூ, ஐதராபாத், அகமதாபாத், கொச்சி விமான நிலையங்களில் முதன்முதலாக அறிமுகம் செய்தனர். இதைத் தொடர்ந்து, சென்னை, ஜெய்ப்பூர், லக்னோ, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களில் இந்த முறை கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி முதல் கோவை, கோழிக்கூடு, இந்தூர், வதோதரா உள்ளிட்ட விமான நிலையங்களில் கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த முறையை விமான போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் விமானப் பாதுகாப்பு அமைப்பினரும் இணைந்து தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரூ, ஐதராபாத், அகமதாபாத், கொச்சி விமான நிலையங்களில் முதன்முதலாக அறிமுகம் செய்தனர். இதைத் தொடர்ந்து, சென்னை, ஜெய்ப்பூர், லக்னோ, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களில் இந்த முறை கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி முதல் கோவை, கோழிக்கூடு, இந்தூர், வதோதரா உள்ளிட்ட விமான நிலையங்களில் கொண்டுவரப்பட்டுள்ளது.