அலுவலர் அந்தஸ்துக்கு குறைவான தரத்தில் பணியாற்றிய முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளில் 2017-18 ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு தொழிற்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மைய முப்படைவீரர் வாரியத்தின் மூலம் வழங்கப்படும் பாரதப்பிரதமரின் கல்வி உதவித்தொகையினைப் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
12-ஆம் வகுப்பில் 60 சதவிகிதம் மதிப்பெண்களுக்கு மேல்பெற்று தேர்ச்சி பெற்று தொழிற்படிப்பு பயிலும் முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயனடைய முடியும். இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தகவல் கையேடுகளை www.ksb.gov.in எனும் இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மற்றும் ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 15.11.2017 ஆகும்.
எனவே, கோவை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்தோர்களின் வாரிசுகள் இக்கல்வி நிதியுதவியினைப் பெற குறித்த காலத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
12-ஆம் வகுப்பில் 60 சதவிகிதம் மதிப்பெண்களுக்கு மேல்பெற்று தேர்ச்சி பெற்று தொழிற்படிப்பு பயிலும் முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயனடைய முடியும். இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தகவல் கையேடுகளை www.ksb.gov.in எனும் இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மற்றும் ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 15.11.2017 ஆகும்.
எனவே, கோவை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்தோர்களின் வாரிசுகள் இக்கல்வி நிதியுதவியினைப் பெற குறித்த காலத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.