மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வு, பல்வேறு வழக்குகளுக்குப் பின் நடத்தப்பட்டது. 'நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டங்கள் நடந்தன.

இந்நிலையில், 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்த நிலையில், நீட் நுழைவுத் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற்று வந்தது.
தொடர்ந்து, நீட் தேர்விற்கு எதிராக அனிதா போராடி வந்த நிலையில் தொடர் மனஅழுத்தத்தின் காரணமாகவும், மருத்துவப் படிப்பிற்கான வாய்ப்புகள் பரிக்கப்பட்டதன் விரக்தியினாலும் செப்டம்பர் 1ம் தேதியன்று மாணவி அனிதா தற்கொலை செய்து உயிரிழந்தார்.

இதனால், ஆவேசமடைந்த தமிழக மக்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள், அரசியல் அமைப்பினர் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும். அனிதா மரணத்திற்கு நீதி கோரியும் கோவையில் இன்று இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள், 'எங்கள் போராட்டத்திற்கு மத்திய மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை. அதன்காரணமாகவே இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றோம். மேலும், அரசு இந்த போக்கை கடைபிடித்தால் எங்கள் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகரும்' என்றனர்.

இந்நிலையில், 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்த நிலையில், நீட் நுழைவுத் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற்று வந்தது.
தொடர்ந்து, நீட் தேர்விற்கு எதிராக அனிதா போராடி வந்த நிலையில் தொடர் மனஅழுத்தத்தின் காரணமாகவும், மருத்துவப் படிப்பிற்கான வாய்ப்புகள் பரிக்கப்பட்டதன் விரக்தியினாலும் செப்டம்பர் 1ம் தேதியன்று மாணவி அனிதா தற்கொலை செய்து உயிரிழந்தார்.

இதனால், ஆவேசமடைந்த தமிழக மக்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள், அரசியல் அமைப்பினர் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும். அனிதா மரணத்திற்கு நீதி கோரியும் கோவையில் இன்று இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள், 'எங்கள் போராட்டத்திற்கு மத்திய மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை. அதன்காரணமாகவே இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றோம். மேலும், அரசு இந்த போக்கை கடைபிடித்தால் எங்கள் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகரும்' என்றனர்.