சிறந்த நகைக்கடைக்கான விருதை பெற்றது சுமங்கலி நிறுவனம்

கோவையில் கடந்த ஆண்டு சில்லறை வர்த்தகத்தில் சிறந்து விளங்கிய நகைக் கடை நிறுவனங்களுக்கு யூ.பி.எம். இந்தியா சார்பில் விருது வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், கோவையில் சிறந்து விளங்கிய நிறுவனமாக சுமங்கலி நகைக்கடை நிறுவனம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. 

தலைநகரில் உள்ள மிகப்பெரிய நகைக்கடைகள், இறக்குமதி, ஏற்றுமதி வியாபாரிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் செந்தில் பெற்றுக் கொண்டார். 



விருது பெற்றது தொடர்பாக அவர் பேசுகையில், "மிகப்பெரிய நிறுவனங்கள் செயல்படும் இடங்களில் கோவையும் ஒன்று. நகைகளை வடிவமைக்கும் கலைஞர்கள் இங்குதான் அதிகம் உள்ளனர்". இவ்வாறு அவர் கூறினார். 

ஆண்டுதோறும் 25 மிகப் பெரிய கண்காட்சிகளும், உலகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட மாநாடுகளையும் யூ.பி.எம். இந்தியா நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...