ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரு துருவங்களாக இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் அண்மையில் இணைந்தனர். இதையடுத்து, முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்கவும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் தினகரனை கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்காக அதிமுக பொதுக்குழுவை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டினர்.
இதனைத்தொடர்ந்து, பொதுக்குழுக் கூட்டத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை, அதிமுக நிர்வாகிகள் செய்தனர். இதில் மொத்தம் 2130 பேர் பங்கேற்றனர். வழக்கமாக பொதுக்குழு, செயற்குழுவில் உறுப்பினர்களாக இல்லாதவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படுவர். ஆனால், இன்று நடைபெற்றக் கூட்டத்தில் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் கூடிய அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலா மற்றும் துணைப் பொதுச் செயலாளராக இருந்த டி.டி.வி.தினகரன் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.
மேலும், தினகரன் அறிவித்த நியமனங்கள் செல்லாது என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் வருமாறு:-
1. இரட்டை இலை சின்னத்தை மீட்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
2. ஜெயலலிதா நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அந்தந்த பதவிகளில் நீடிப்பார்கள்.
3. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் அரசுக்கு பாராட்டு, விழா தொடர்ந்து நடக்கும்.
4. ஜெயலலிதா நினைவிடத்திற்கு ரூ.15 கோடி ஒதுக்கிய அரசுக்கு நன்றி.
5. வார்த் புயல் மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு.
6. தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள், நியமனங்கள் செல்லாது.
7. உள்ளாட்சி தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் வெற்றிக்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும்.
8. சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் ரத்து.
9. ஜெயலலிதாவிற்குப் பின் கட்சியில் பொதுச் செயலாளர் யாரும் கிடையாது. அவர் தான் நிரந்தர பொதுச் செயலாளர் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, பொதுக்குழுக் கூட்டத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை, அதிமுக நிர்வாகிகள் செய்தனர். இதில் மொத்தம் 2130 பேர் பங்கேற்றனர். வழக்கமாக பொதுக்குழு, செயற்குழுவில் உறுப்பினர்களாக இல்லாதவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படுவர். ஆனால், இன்று நடைபெற்றக் கூட்டத்தில் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் கூடிய அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலா மற்றும் துணைப் பொதுச் செயலாளராக இருந்த டி.டி.வி.தினகரன் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.
மேலும், தினகரன் அறிவித்த நியமனங்கள் செல்லாது என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் வருமாறு:-
1. இரட்டை இலை சின்னத்தை மீட்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
2. ஜெயலலிதா நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அந்தந்த பதவிகளில் நீடிப்பார்கள்.
3. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் அரசுக்கு பாராட்டு, விழா தொடர்ந்து நடக்கும்.
4. ஜெயலலிதா நினைவிடத்திற்கு ரூ.15 கோடி ஒதுக்கிய அரசுக்கு நன்றி.
5. வார்த் புயல் மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு.
6. தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள், நியமனங்கள் செல்லாது.
7. உள்ளாட்சி தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் வெற்றிக்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும்.
8. சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் ரத்து.
9. ஜெயலலிதாவிற்குப் பின் கட்சியில் பொதுச் செயலாளர் யாரும் கிடையாது. அவர் தான் நிரந்தர பொதுச் செயலாளர் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.