தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) 58-ஆம் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதியன்று கோவையிலுள்ள ஓட்டல் லீமெரிடியனில் நடைபெற்றது.
பொதுக்குழுவை தொடர்ந்து நடைபெற்ற 2017-2018 ஆம் ஆண்டுக்கான முதல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் 2017-18-ம் வருடத்திற்கு சைமாவின் தலைவராக கோவை, கே.பி.ஆர். மில்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர், சிட்டி என்று அழைக்கப்படும் இந்திய ஜவுளி கூட்டமைப்பில் நிர்வாக குழு உறுப்பினராக உள்ளார். மற்றும் கே.பி.ஆர். குழுமங்களின் பல்வேறு நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தின் முதன்மை அறங்காவலராக உள்ளார்.
மேலும் நடராஜன் அரசு போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இலவசமாக கே.பி.ஆர் ஐஏஎஸ் அகாடமி என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
சைமாவின் துணைத் தலைவர்களாக அவினாசி, எஸ்.சி.ம் டெக்ஸ்டைல்ஸ் ஸ்பின்னர்ஸ் மற்றும் தி சென்னை சில்க்சின் நிர்வாக இயக்குநர் கே.விநாயகம் மற்றும் பிரீகாட் மெரிடியன் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஸ்வின் சந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பொதுக்குழுவை தொடர்ந்து நடைபெற்ற 2017-2018 ஆம் ஆண்டுக்கான முதல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் 2017-18-ம் வருடத்திற்கு சைமாவின் தலைவராக கோவை, கே.பி.ஆர். மில்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர், சிட்டி என்று அழைக்கப்படும் இந்திய ஜவுளி கூட்டமைப்பில் நிர்வாக குழு உறுப்பினராக உள்ளார். மற்றும் கே.பி.ஆர். குழுமங்களின் பல்வேறு நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தின் முதன்மை அறங்காவலராக உள்ளார்.
மேலும் நடராஜன் அரசு போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இலவசமாக கே.பி.ஆர் ஐஏஎஸ் அகாடமி என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
சைமாவின் துணைத் தலைவர்களாக அவினாசி, எஸ்.சி.ம் டெக்ஸ்டைல்ஸ் ஸ்பின்னர்ஸ் மற்றும் தி சென்னை சில்க்சின் நிர்வாக இயக்குநர் கே.விநாயகம் மற்றும் பிரீகாட் மெரிடியன் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஸ்வின் சந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.