கோவையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பள்ளி மாணவர்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை வெள்ளலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 80-க்கும் மேற்பட்டோர் இன்று (11,09,2017) காலாண்டுத் தேர்வை புறக்கணித்து பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர். 

இது குறித்து தகவலறிந்து வந்த போலீஸார் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து நீர் தேர்வுக்கு எதிராகவும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வை  ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.



இறுதியில், பள்ளி ஆசிரியர்கள் அறிவுறுத்தலின் பேரில் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இருப்பினும், மாணவிகள் போராட்டத்தை தொடர்ந்ததால், பள்ளியில் பதற்றம் நிலவியது.

இதனைத்தொடர்ந்து மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாக பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வீரமணி மற்றும் கல்லூரி மாணவர்கள் பிரபாகரன், தாமோதரன் ஆகியோரை போலீஸார் கைது செய்து அழைத்து சென்றனர். 

இது குறித்து பள்ளி மாணவர்கள் கூறுகையில், "11ம் வகுப்பு பொதுத் தேர்வால் இரட்டை பணி சுமை ஏற்படுகிறது. தமிழகத்தில் நிரந்தரமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...