தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை வெள்ளலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 80-க்கும் மேற்பட்டோர் இன்று (11,09,2017) காலாண்டுத் தேர்வை புறக்கணித்து பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீஸார் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து நீர் தேர்வுக்கு எதிராகவும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இறுதியில், பள்ளி ஆசிரியர்கள் அறிவுறுத்தலின் பேரில் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இருப்பினும், மாணவிகள் போராட்டத்தை தொடர்ந்ததால், பள்ளியில் பதற்றம் நிலவியது.
இதனைத்தொடர்ந்து மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாக பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வீரமணி மற்றும் கல்லூரி மாணவர்கள் பிரபாகரன், தாமோதரன் ஆகியோரை போலீஸார் கைது செய்து அழைத்து சென்றனர்.
இது குறித்து பள்ளி மாணவர்கள் கூறுகையில், "11ம் வகுப்பு பொதுத் தேர்வால் இரட்டை பணி சுமை ஏற்படுகிறது. தமிழகத்தில் நிரந்தரமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீஸார் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து நீர் தேர்வுக்கு எதிராகவும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இறுதியில், பள்ளி ஆசிரியர்கள் அறிவுறுத்தலின் பேரில் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இருப்பினும், மாணவிகள் போராட்டத்தை தொடர்ந்ததால், பள்ளியில் பதற்றம் நிலவியது.
இதனைத்தொடர்ந்து மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாக பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வீரமணி மற்றும் கல்லூரி மாணவர்கள் பிரபாகரன், தாமோதரன் ஆகியோரை போலீஸார் கைது செய்து அழைத்து சென்றனர்.
இது குறித்து பள்ளி மாணவர்கள் கூறுகையில், "11ம் வகுப்பு பொதுத் தேர்வால் இரட்டை பணி சுமை ஏற்படுகிறது. தமிழகத்தில் நிரந்தரமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.