கோவையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பள்ளி மாணவர்கள் போராட்டம்

தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை வெள்ளலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 80-க்கும் மேற்பட்டோர் இன்று (11,09,2017) காலாண்டுத் தேர்வை புறக்கணித்து பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர். 

இது குறித்து தகவலறிந்து வந்த போலீஸார் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து நீர் தேர்வுக்கு எதிராகவும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வை  ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.



இறுதியில், பள்ளி ஆசிரியர்கள் அறிவுறுத்தலின் பேரில் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இருப்பினும், மாணவிகள் போராட்டத்தை தொடர்ந்ததால், பள்ளியில் பதற்றம் நிலவியது.

இதனைத்தொடர்ந்து மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாக பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வீரமணி மற்றும் கல்லூரி மாணவர்கள் பிரபாகரன், தாமோதரன் ஆகியோரை போலீஸார் கைது செய்து அழைத்து சென்றனர். 

இது குறித்து பள்ளி மாணவர்கள் கூறுகையில், "11ம் வகுப்பு பொதுத் தேர்வால் இரட்டை பணி சுமை ஏற்படுகிறது. தமிழகத்தில் நிரந்தரமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...