கோவை காந்திபுரம் பகுதியில் நேற்று முன்தினம் (செப்.,4) நீட் தேர்வுக்கு எதிராக மாணவர் கூட்டமைப்பினர் சாலை மறியிலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த போலீசார் மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.
போராட்டத்தைக் கட்டுப்படுத்த மாநகர சட்டம், ஒழுங்கு உதவி ஆணையர் ஜெயராமன் அங்கிருந்தார். அப்போது, அவர் அருகில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் மீது பாலியல் சீண்டல் செய்ததாக தனியார் தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பியது. இந்த வீடியோ காட்சி சமுக வலைதளங்களில் பரவி வைரலாக பரவி வருகிறது.

இதைத்தொடர்ந்து, பெண் காவல் உதவி ஆய்வாளரிடம் தவறாக நடந்து கொண்ட காவல்துறை உயர் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இன்று (செப்.,6) கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து பெண் போலீசாரிடம் தவறாக நடந்து கொண்டதாக சர்ச்சையில் சிக்கிய உதவி ஆணையர் (சட்டம் ஒழுங்கு) ஜெயராமன் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.