பாலியல் சீண்டல் விவகாரம் : உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாதர் சங்கத்தினர் மனு


கோவை காந்திபுரம் பகுதியில் நேற்று முன்தினம் (செப்.,4) நீட் தேர்வுக்கு எதிராக மாணவர் கூட்டமைப்பினர் சாலை மறியிலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த போலீசார் மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். 

போராட்டத்தைக் கட்டுப்படுத்த மாநகர சட்டம், ஒழுங்கு உதவி ஆணையர் ஜெயராமன் அங்கிருந்தார். அப்போது, அவர் அருகில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் மீது பாலியல் சீண்டல் செய்ததாக தனியார் தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பியது. இந்த வீடியோ காட்சி சமுக வலைதளங்களில் பரவி வைரலாக பரவி வருகிறது.



இதைத்தொடர்ந்து, பெண் காவல் உதவி ஆய்வாளரிடம் தவறாக நடந்து கொண்ட காவல்துறை உயர் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இன்று (செப்.,6) கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து  பெண் போலீசாரிடம் தவறாக நடந்து கொண்டதாக சர்ச்சையில் சிக்கிய உதவி ஆணையர் (சட்டம் ஒழுங்கு) ஜெயராமன் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...