பாலியல் சீண்டல் விவகாரம் : உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாதர் சங்கத்தினர் மனு


கோவை காந்திபுரம் பகுதியில் நேற்று முன்தினம் (செப்.,4) நீட் தேர்வுக்கு எதிராக மாணவர் கூட்டமைப்பினர் சாலை மறியிலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த போலீசார் மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். 

போராட்டத்தைக் கட்டுப்படுத்த மாநகர சட்டம், ஒழுங்கு உதவி ஆணையர் ஜெயராமன் அங்கிருந்தார். அப்போது, அவர் அருகில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் மீது பாலியல் சீண்டல் செய்ததாக தனியார் தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பியது. இந்த வீடியோ காட்சி சமுக வலைதளங்களில் பரவி வைரலாக பரவி வருகிறது.



இதைத்தொடர்ந்து, பெண் காவல் உதவி ஆய்வாளரிடம் தவறாக நடந்து கொண்ட காவல்துறை உயர் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இன்று (செப்.,6) கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து  பெண் போலீசாரிடம் தவறாக நடந்து கொண்டதாக சர்ச்சையில் சிக்கிய உதவி ஆணையர் (சட்டம் ஒழுங்கு) ஜெயராமன் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...