பெடல்பீட், தமிழ்நாடு சைக்கிளிங் கிளப் இணைந்து நடத்தும் உள் அரங்கு சைக்கிள் போட்டி

பெடல்பீட், தமிழ்நாடு சைக்கிளிங் கிளப் இணைந்து ஸ்பின்ஃபோன்டோ (SpinFondo) என்ற உள் அரங்கு சைக்கிள் போட்டியை நடத்துகிறது. பல சுற்றுகளாக நடைபெறும் இந்தப் போட்டி பெடல்பீட் மையத்தில் நடக்கிறது. சென்னை, கோவை, ஐதராபாத் மற்றும் பெங்களூரூ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.  



இந்திய அளவில் உள்அரங்கு சைக்கிள் போட்டியை நடத்துவதற்கான மையத்தை சொந்தமாக வைத்துள்ள நிறுவனம் பெடல்பீட் ஆகும். உள் அரங்கு சைக்கிள் போட்டியின் மூலம் இருதயம் சீராக இயங்க வழிவகை செய்கிறது.  பொறுமை, உடல்திறன். சீரான உடல்நிலை போன்ற ஆரோக்கியமான பயன்கள் உள்ளன. அதோடு, தற்போதைய காலத்தில் இளைஞர்கள் மத்தியில் காணப்படும் உடல் பருமனை குறைக்கவும் உள் அரங்கு சைக்கிள் போட்டிகள் உதவுகின்றன. 



ஸ்பின்ஃபோன்டோ (SpinFondo) என்ற உள் அரங்கு சைக்கிள் போட்டியானது, இருவயது பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகிறது. ஆண் மற்றும் பெண் என இருபாலாருக்கும் போட்டிகள், 40 வயதுக்குட்பட்டோர், 40-வயதுக்கு மேற்பட்டோர் என நடக்கிறது. 

கடந்த முறை நடந்த போட்டியில், ஆண்களுக்கான 40 வயதுக்குட்பட்டோர் போட்டியில் சதீஷும், 40-வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் சுனில் என்பவரும் வெற்றி பெற்றனர். இதேபோல, பெண்களுக்கான 40 வயதுக்குட்பட்டோர் போட்டியில் டோரிட்டி கோட்ஜி என்பவரும், 40-வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் சாந்தினி என்பவரும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...