பெடல்பீட், தமிழ்நாடு சைக்கிளிங் கிளப் இணைந்து ஸ்பின்ஃபோன்டோ (SpinFondo) என்ற உள் அரங்கு சைக்கிள் போட்டியை நடத்துகிறது. பல சுற்றுகளாக நடைபெறும் இந்தப் போட்டி பெடல்பீட் மையத்தில் நடக்கிறது. சென்னை, கோவை, ஐதராபாத் மற்றும் பெங்களூரூ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்திய அளவில் உள்அரங்கு சைக்கிள் போட்டியை நடத்துவதற்கான மையத்தை சொந்தமாக வைத்துள்ள நிறுவனம் பெடல்பீட் ஆகும். உள் அரங்கு சைக்கிள் போட்டியின் மூலம் இருதயம் சீராக இயங்க வழிவகை செய்கிறது. பொறுமை, உடல்திறன். சீரான உடல்நிலை போன்ற ஆரோக்கியமான பயன்கள் உள்ளன. அதோடு, தற்போதைய காலத்தில் இளைஞர்கள் மத்தியில் காணப்படும் உடல் பருமனை குறைக்கவும் உள் அரங்கு சைக்கிள் போட்டிகள் உதவுகின்றன.

ஸ்பின்ஃபோன்டோ (SpinFondo) என்ற உள் அரங்கு சைக்கிள் போட்டியானது, இருவயது பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகிறது. ஆண் மற்றும் பெண் என இருபாலாருக்கும் போட்டிகள், 40 வயதுக்குட்பட்டோர், 40-வயதுக்கு மேற்பட்டோர் என நடக்கிறது.
கடந்த முறை நடந்த போட்டியில், ஆண்களுக்கான 40 வயதுக்குட்பட்டோர் போட்டியில் சதீஷும், 40-வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் சுனில் என்பவரும் வெற்றி பெற்றனர். இதேபோல, பெண்களுக்கான 40 வயதுக்குட்பட்டோர் போட்டியில் டோரிட்டி கோட்ஜி என்பவரும், 40-வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் சாந்தினி என்பவரும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

இந்திய அளவில் உள்அரங்கு சைக்கிள் போட்டியை நடத்துவதற்கான மையத்தை சொந்தமாக வைத்துள்ள நிறுவனம் பெடல்பீட் ஆகும். உள் அரங்கு சைக்கிள் போட்டியின் மூலம் இருதயம் சீராக இயங்க வழிவகை செய்கிறது. பொறுமை, உடல்திறன். சீரான உடல்நிலை போன்ற ஆரோக்கியமான பயன்கள் உள்ளன. அதோடு, தற்போதைய காலத்தில் இளைஞர்கள் மத்தியில் காணப்படும் உடல் பருமனை குறைக்கவும் உள் அரங்கு சைக்கிள் போட்டிகள் உதவுகின்றன.

ஸ்பின்ஃபோன்டோ (SpinFondo) என்ற உள் அரங்கு சைக்கிள் போட்டியானது, இருவயது பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகிறது. ஆண் மற்றும் பெண் என இருபாலாருக்கும் போட்டிகள், 40 வயதுக்குட்பட்டோர், 40-வயதுக்கு மேற்பட்டோர் என நடக்கிறது.
கடந்த முறை நடந்த போட்டியில், ஆண்களுக்கான 40 வயதுக்குட்பட்டோர் போட்டியில் சதீஷும், 40-வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் சுனில் என்பவரும் வெற்றி பெற்றனர். இதேபோல, பெண்களுக்கான 40 வயதுக்குட்பட்டோர் போட்டியில் டோரிட்டி கோட்ஜி என்பவரும், 40-வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் சாந்தினி என்பவரும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.