ஒரே தேசம், ஒரே வரி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி. வரி) கடந்த ஜுலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.
அனைத்து வணிக பெருமக்களுக்கும் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்க தமிழக அரசின் வணிகவரித்துறை சார்பாக மாநில அளவிலான கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவையில், ஜி.எஸ்.டி.வரி விதிப்பில் உள்ள நடைமுறைகள் குறித்து வணிகர்கள் மற்றும் வரி செலுத்துபவர்களிடையே நிலவி வரும் குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில், டி.ஐ.இ., கோயம்பத்தூர் சார்பில் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது, வரும் 8-ம் தேதி பீளமேட்டில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி. மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் உள்ள கருத்தரங்கு மையத்தில் நடைபெறுகிறது. இதில், ஜி.கார்த்திக்கேயன், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு, ஜி.எஸ்.டி.வரி குறித்த சந்தேகங்கள் மற்றும் அனுபவங்களை எடுத்துரைக்க உள்ளனர்.
டி.ஐ.இ., கோயம்பத்தூர் நிறுவனம் புதிய தொழில்முனைவோர்களின் முன்னேற்றம், வியாபாரத்தை பெருக்குவது உள்ளிட்டவைகள் குறித்தத பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்நிறுவனம், 17 நாடுகளை சேர்ந்த 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ளது. கோவையை பொறுத்தவரையில், 150 உறுப்பினர்கள் டி.ஐ.இ., கோயம்பத்தூர் நிறுவனத்தின் மூலம் பலனடைந்துள்ளனர்.
அனைத்து வணிக பெருமக்களுக்கும் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்க தமிழக அரசின் வணிகவரித்துறை சார்பாக மாநில அளவிலான கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவையில், ஜி.எஸ்.டி.வரி விதிப்பில் உள்ள நடைமுறைகள் குறித்து வணிகர்கள் மற்றும் வரி செலுத்துபவர்களிடையே நிலவி வரும் குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில், டி.ஐ.இ., கோயம்பத்தூர் சார்பில் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது, வரும் 8-ம் தேதி பீளமேட்டில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி. மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் உள்ள கருத்தரங்கு மையத்தில் நடைபெறுகிறது. இதில், ஜி.கார்த்திக்கேயன், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு, ஜி.எஸ்.டி.வரி குறித்த சந்தேகங்கள் மற்றும் அனுபவங்களை எடுத்துரைக்க உள்ளனர்.
டி.ஐ.இ., கோயம்பத்தூர் நிறுவனம் புதிய தொழில்முனைவோர்களின் முன்னேற்றம், வியாபாரத்தை பெருக்குவது உள்ளிட்டவைகள் குறித்தத பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்நிறுவனம், 17 நாடுகளை சேர்ந்த 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ளது. கோவையை பொறுத்தவரையில், 150 உறுப்பினர்கள் டி.ஐ.இ., கோயம்பத்தூர் நிறுவனத்தின் மூலம் பலனடைந்துள்ளனர்.