வலுக்கிறது மாணவர்கள் போராட்டம்: தீர்வு என்ன ?

கோவையில் ஒரு போராட்டம் நடைபெற்றால், அது மிக விரைவாக தமிழகம் முழுவதும் பரவும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இந்த நிலையில் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிராகவும் கோவையில் போராட்டங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

பல்வேறு அமைப்புகள் முன்னெடுத்து நடத்தி வந்த இந்தப் போராட்டங்களை தற்போது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்  முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

நேற்று மாலை கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே அனைத்துக் கட்சி மாணவர் கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது காவலர்கள் இளைஞர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். மேலும், ஒரு சிலர் மீது லேசான தாக்குதலையும் காவல்துறையினர் நடத்தினர். அப்பொழுது அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் காவல்துறையினரிடம், 'இளைஞர்களை அடிக்க வேண்டாம்' என்று வலியுறுத்தியதுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்ணீர் கொடுத்து திடப்படுத்தினர்.

இப்படியாக மக்களின் ஆதரவுடன் கோவையில் தொடங்கிய போராட்டம் நொடிக்கு நொடி உயிர் பெற்று வருகிறது. நேற்று மாலை பல்வேறு கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இன்று காலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கோவில்பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து, வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.



வழக்கறிஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்களும் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேப்போல், கோவையில் உள்ள பல்வேறு தனியார் கல்லூரி மாணவர்களும் நீட் தேர்வு வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



அரசு இந்தப் பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு தீர்வு காணாவிட்டால் ஜல்லிக்கட்டு போராட்டம் போல மீண்டுமொரு போராட்டத்தை தமிழகம் காணும் என்று இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

பதவிச் சண்டை, உள்ளூர் அரசியல் என்று குழம்பிய குட்டையாக இருக்கும் தமிழக அரசியல் களத்தில் இருந்து, நீட் தேர்வு வேண்டாம் என்று மத்திய அரசை நிர்பந்திக்கும் துணிச்சல் எந்த அமைச்சருக்கு, பாராளுமன்ற உறுப்பினருக்கு உள்ளது என்பதில் ஐயப்பாடு உள்ளது.

மீண்டுமொரு போராட்டக்களத்தை காணும் முன், ஆளும் கட்சியினர் துரிதமாக செயல்பட்டு, கட்சிப் பிரச்சனைகளை ஓரம் கட்டிவிட்டு, நீட் பிரச்சனைக்கு குரல் கொடுத்தால் போராட்டங்கள் ஓயும்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...