வலுக்கிறது மாணவர்கள் போராட்டம்: தீர்வு என்ன ?

கோவையில் ஒரு போராட்டம் நடைபெற்றால், அது மிக விரைவாக தமிழகம் முழுவதும் பரவும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இந்த நிலையில் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிராகவும் கோவையில் போராட்டங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

பல்வேறு அமைப்புகள் முன்னெடுத்து நடத்தி வந்த இந்தப் போராட்டங்களை தற்போது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்  முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

நேற்று மாலை கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே அனைத்துக் கட்சி மாணவர் கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது காவலர்கள் இளைஞர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். மேலும், ஒரு சிலர் மீது லேசான தாக்குதலையும் காவல்துறையினர் நடத்தினர். அப்பொழுது அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் காவல்துறையினரிடம், 'இளைஞர்களை அடிக்க வேண்டாம்' என்று வலியுறுத்தியதுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்ணீர் கொடுத்து திடப்படுத்தினர்.

இப்படியாக மக்களின் ஆதரவுடன் கோவையில் தொடங்கிய போராட்டம் நொடிக்கு நொடி உயிர் பெற்று வருகிறது. நேற்று மாலை பல்வேறு கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இன்று காலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கோவில்பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து, வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.



வழக்கறிஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்களும் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேப்போல், கோவையில் உள்ள பல்வேறு தனியார் கல்லூரி மாணவர்களும் நீட் தேர்வு வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



அரசு இந்தப் பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு தீர்வு காணாவிட்டால் ஜல்லிக்கட்டு போராட்டம் போல மீண்டுமொரு போராட்டத்தை தமிழகம் காணும் என்று இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

பதவிச் சண்டை, உள்ளூர் அரசியல் என்று குழம்பிய குட்டையாக இருக்கும் தமிழக அரசியல் களத்தில் இருந்து, நீட் தேர்வு வேண்டாம் என்று மத்திய அரசை நிர்பந்திக்கும் துணிச்சல் எந்த அமைச்சருக்கு, பாராளுமன்ற உறுப்பினருக்கு உள்ளது என்பதில் ஐயப்பாடு உள்ளது.

மீண்டுமொரு போராட்டக்களத்தை காணும் முன், ஆளும் கட்சியினர் துரிதமாக செயல்பட்டு, கட்சிப் பிரச்சனைகளை ஓரம் கட்டிவிட்டு, நீட் பிரச்சனைக்கு குரல் கொடுத்தால் போராட்டங்கள் ஓயும்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...